Dont Worry.. Be Happy!

விந்து கெடும் விதம்..


http://tamilsexpower.blogspot.in/ 

நமது விந்து நாதம் என்பது உணவு இரசமாகும் தன்மை முதற் கொண்டு நரம்பு வரை உருவான தன்மைகளை உள்ளடக்கிய மொத்த உயிர் உடலின் சுருக்க பதிவேயாகும். இவைகளின் வீரியமும் வலுவும் முறையே, செரிமாண சக்தி, இரத்தவிருத்தி, சதை ஆற்றல், கொழுப்புச் சத்து சேமிப்பு, எலும்பு வலிமை, நரம்பு விழிப்புணர்வு மற்றும் மூளை திறன் ஆகியவற்றின் சாராம்சத்தைக் கொண் டிருக்கும். நண்பர்களே! நாம் எவ்விதம் வளர்ந்து உருவானோமோ அவ்விதமே விந்து நாதக் கருமையப் பதிவு விளங்கும். இந்தக் கருமையப் பதிவானது நாம் நம் தாயின் ஏழாம் மாத கருவினிலேயே தொடங்கி விடுகிறது. நண்பர் களே! நாம் கருவான சூழலை நாம் முடிவு செய்ய முடியாது தான். அது நம் பெற்றோர் களின் தன்மையைப் பொறுத்தது. அதே போல், நாம் அறிவு (நரம்பு மற்றும் மூளை) முதிற்சி அடையும் (14 வயது) வரை வளர்க்கப்படும் சூழலும் நம் கைகளில் இல்லைதான். ஆனால், இதன் பிறகு நம் வாழ்க்கை நம் கைகளில் என்று புரிந்து வாழ்தல் முடியும் தானே?
சரி, அன்பர்களே! முதலில் விந்து தன்மைகள் கெடும் விதங்களை அறிந்து, அதனைத் தவிர்த்து வாழ்வது பற்றி இப்போது பார்ப்போம்.

33. அமிலத்தன்மை :
வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையால் உணவு செரி மானம் கெட்டு இரத்தத்திற்கு சத்தும் சக்தியும் கிடைக்காமல் போவதால் சதை முதல் விந்து வரை பலகீணம் ஏற்படுகிறது. அமிலத் தன்மையால் விந்து நீர்த்துப்போவதும் வீரீயம் குறைவதும் ஏற்படும். அமிலத் தன்மையால் உடலுறவில் எரிச்சலும், பொறுமையின்மையும், விந்து விரைவாக வெளியேறுவதும் நிகழும்.

34. மண்ணீரல் தளர்ச்சி : மண்ணீரல் தளர்ச்சியானது சதையாக உள்ள உடல் உள் உறுப்புகளையும் நரம்புகளையும் தளர்வடையச் செய்யும் (மண்ணீரல் சக்தி கிடைக்காததால்). இவ்வாறு சதையும் நரம்பும் தளர்ச்சி அடையும் போது சதையாக உள்ள ஆணுறுப்பும் தளர்ந்து, உடலுறவின் போது விரைப்புத் தன்மை (உழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்) குறைந்தோ அல்லது முற்றிலும் இன்றியோ காணப்படும்.

35. செரிமானக் குறைவு : நம் செரிமானத்திறனை பாதிக்காத வகையில் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்ட உணவு இரசமாகி, இரத்தமாகி விந்து வரை சத்தும் சக்தியும் வந்து சேரும். செரிமானம் பாதிக்கும் போதெல்லாம், விந்து வரை சத்தும் சக்தியும் அளிக்க நமது இரத்தம், சதை, மற்றும் எலும்பு கரையும் நிலை ஏற்படும்.

36. குளுக்கோஸ் ஏற்றுதல் : சக்தி குறைபாட்டிற்காக ஒவ்வொரு முறையும் குளுக்கோஸ் ஏற்றும் போதும் நமது செரிமாண மண்டலம் முற்றிலும் செயல் ஆக்கத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகிறது. இந்தக் காலவரையரையில் இரத்தம் முதல் விந்து வரை சக்தி இழப்பு ஏற்படுகிறது.
37. உடல் உஷ்ணம் : வெப்பமான சூழலில் (வெல்டிங் உள்ளிட்ட) வேலை செய்பவர்களின் உடல் எப்பொழுதும் உஷ்ணமாகவே இருப்பதால், விந்து உற்பத்தியும் வீரியமும் குறையும் தன்மை ஏற்படுகிறது.
38. இரத்த சோகை : இரத்த சோகையானது சதை முதல் விந்து வரை பலமிழக்கச் செய்து ஆண்மைக் குறைவை உண்டாக்கும். உடல் உறவுக்குப்பின் மிகுதியான உடற் சோர்வு ஏற்படும்.இரத்த சோகைக்காக ஒவ்வொரு முறையும் வேறொருவரின் இரத்தம் ஏற்றும் போதும், நமது உடல் உறுப்புகள் ஏற்று அனுசரித்துக் கொள்ள ஐந்து வருட சக்தி இழப்புக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் பலனாய் சதை முதல் விந்து வரை நீடித்த பலமிழப்புக்கு ஆட்படுகிறது.
39. இரத்த அழுத்தம் : கெட்டக் கொழுப்புச் சேர்மானத்தால் ஏற்படும் இரத்த அழுத்தமானது நரம்புகளை அதிகமாகத்தூண்டி விந்து உற்பத்தியை விரைவாக்கி, அதிக பாலுணர்வையும் பொறுமை யின்மையும் ஏற்படுத்திவிடுகிறது. கெட்டக் கொழுப்புத் தன்மையால் ஆணுறுப்பானது சுருங்கி விரியும் தன்மை இழந்து விரைப்புத் தன்மை குறையக்காரணமாகிறது.

40. வலி நிவாரணிகள் : வலி நிவாரணிகள் (குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகள்) எடுத்துக்கொள்ளும் போது நரம்புகள் உணர்வு குறைந்த நிலைக்குத் தள்ளப்படுவதால் நரம்பிலிருந்து விந்துக்கு சக்தி சேர்வது குறைந்து போகிறது. இதனால், மலட்டுத்தன்மை அதிகமாக வழிவகுக்கிறது, இதன் பயனாய் பாலுணர்வு குறையவும், உடலுறவில் நாட்டமின்மையும் வெளிப்படுகிறது. இல்லறச் சிக்கல்கள் இங்கிருந்து ஆரம்பமாகிறது.

41. மன உளைச்சல் : நரம்பு தளர்ச்சியும் இரத்த அழுத்தமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது தெரியும்தானே? மன உளைச்சலுக்கு அற்புத மருந்தாகத் தன்மையான உடலுறவு உதவும் என்பது உண்மைதான். ஆனால், அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்குத் தீர்வாக உடலுறவை மருந்தாக அடிக்கடி பயன்படுத்திக் கொள்வது என்பது நரம்புகளை காலி செய்யும் பாதகமான செயலாக முடியும். நரம்பிலிருந்துதான் விந்துக்கு சக்தி வர வேண்டும் ஆதலால், விந்து பலமிழக்கச் செய்கிறது. 

42. ஹார்மோன் கோளாறு : உச்சம் தலை (பிட்டூட்டரி) முதல் மூலாதாரம் (பாலுணர்வு சுரபிகள்) வரை உள்ள ஏழுவித ஹார்மோன் தொகுப்புகளின் இணக்கம் இருந்தால் மட்டுமே உடல் உயிர் இயக்கம் இணக்கமாகச் செயல்படும். இதில் ஒன்றின் குறைவு அல்லது மிகுதியானது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சீர்கெட வைத்துவிடும். இதன் பயனாய் பாலுறுப்பு நோய்கள் உருவாகவும் வழியாகிவிடுகிறது. உதாரணமாக துரிய (பிட்டூட்டரி) குறைபாடால் முறையற்ற பாலுணர்வையும், பீனியல் (புருவமத்தி-ஆக்கினை மையம்) குறைபாடால் கற்பு ஒழுக்கத்தில் தவறுவதும், தைராய்டு குறைபாடால் விந்து வீரீயம் (Sperm Vitality) குறைவதும், தைமஸ் (நெஞ்சுக் குழி) ஹார்மோன் குறைவால் விந்து வேகம் (நல்ங்ழ்ம் ஙர்ற்ண்ப்ண்ற்ஹ்) குறைவதும், மணிபூரக குறைபாடால் (இன்சுலின் குறைவால்) விந்து எண்ணிக்கை (Sperm Counts) குறைவதும், சுவாதிஸ்டான (அட்ரீணல்) குறைவால் விந்து மற்றும் பிறப்புறுப்பு நோய் தொற்றும் (Sperm, Urinary and Gonadal infections), மூலாதார குறைபாடால் மலட்டுத்தன்மை (Infertility) முதல் பிறப்புறுப்பு புற்று வரை நிகழ வழியா கின்றன. ஆகவே, நண்பர்களே! ஹார்மோன் கோளாறு மனச்சிதைவை உண்டாக்கி, உடல் உறுதியைக் குலைத்து நம்மைப் படிப்படியாக நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

43. தசை இறுக்கம் : எந்திர உடற்பயிற்சி (Gym) மற்றும் கடுமையான விளையாட்டுக்கள் நம் தசை நார்களை கடினமாகவும் இறுக்கமாகவும் ஆக்கச் செய்யும். இதனால் உணவின் சத்தும் சக்தியும் சதையோடு முடங்கி, எலும்பு மற்றும் நரம்பு வலிமை குன்றி ஆண்மையைக் குறைத்துவிடும். வெறும் சதையின் அதீத வேலைப்பாடால் வீரமும் ஆண்மையும் அதீதமாக வெளிப்படுவது போல் மாயத் தோற்றத்தை மட்டுமே உருவாக்க முடியுமே தவிர, உண்மையில் மிக விரைவாக உடல் தளர்வும் ஆண்மைக் குறைவும் ஏற்படும். ஆகவே, தசைகளை இறுக்கப்படுத்த வேண்டாம்.
44. வயக்ரா வகையாராக்கள் : ஆண்மை ஊக்கிகளாகக் கருதப்படும் வயக்ரா உள்ளிட்ட ஸ்டீராய்டு வகை செயற்கை இரசாயணங்கள் எலும்பு, சதை மற்றும் நரம்புகளை கரைத்து தற்காலிகமாக ஆண்மையை உசுப்பி வீரியம் காட்டிவிட்டு, உள்ளதும் போனதடா என்று வற்றிய கிணராகிவிடுவோம், ஜாகிரதை! விந்து உற்பத்தி என்பது உணவு வழி இரசமாகி, இரத்தமாகி, சதையாகி பின் கொழுப்பாகி, எலும்பாகவும் நரம்பாகவும் உருவாகி வரவேண்டும். இடையில் இருந்து கழன்று வந்தால், பின் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான். நீடித்து வாழ வேண்டுமாயின் உடல் உறவை நீட்டிக்கும் வயக்ரா வேண்டாமே!

45.கற்பொழுக்கமின்மை : கற்புத்தன்மை பேனாதவருக்கு ஹார்மோன் சமன்பாடுகெட்டு உயிர் உடல் இணக்கம் இழந்து மனநிம்மதி கெட்டு வாழ வேண்டியதாய் இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பொழுக்க நெறியில் வாழும்போது உடலின் ஆண் (வலது பாகம்) பெண் (இடது பாகம்) சமநிலை, அறிவு (ஆண்) உணர்ச்சி (பெண்) சமநிலை, கார (விந்து) அமில (யோனி திரவம்) சமநிலை, மூன்று தோஷ (வாத, பித்த மற்றும் கபம்) சமநிலை உள்ளிட்டவைகளை பக்குவமாய் பாதுகாக்கும் உண்ணத தன்மை வாய்ந்தது. கற்பொழுக்கம் தவறிய உடலுறவானது விந்து நாத ஜீவ காந்தத்தை குலைத்து இல்லற இணக்கத்தை உயிர், உடல், மனம் மற்றும் ஆண்ம நிலைகளில் மாற்றியமைத்து திண்டாட வைத்துவிடும்.

46. நீரழிவு நோய் : நீரழிவு நோய்க்குக் காரணமான கெட்டச் சர்க்கரையானது உடல் முழுவது தேங்கத் தேங்க, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படையச் செய்கிறது. இதன் விளைவாக இரத்தம் முதல் சதை, கொழுப்பு, எலும்பு யாவும் பாழ்பட்டு விந்துவையும் பாழ்படுத்தி ஆண்மையைக் குலைத்து விடுகிறது.

47. சிறுநீரக மற்றும் தோல் தொற்று : உடற்கழிவுகளின் தேக்கத்தால் சிறுநீரக மற்றும் தோல் தொற்று நோய்கள் அதிகமாகும் போது ஆணுறுப்பு மற்றும் விந்து தொற்று ஏற்பட்டு தீராத அரிப்பையும் வேதனையும் தரும்.

48. வேண்டாத பாலியல் பழக்கங்கள் : சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி, செயற்கையாக விந்து வெளியேற்றி பிஞ்சிலேயே பழுத்து மலட்டுத் தன்மைக்கு விரைவாக அழைத்துச் செல்லும் பழக்கம் நமக்கு வேண்டாமே!. “விந்து விட்டவன் நொந்து போனான்’ என்பது முதியோர் வாக்கு என்பதை மறக்க வேண்டாம். இயற்கையான உடலுறவில் வெளியேற்றிய விந்துச் சக்திக்கு ஈடாக துணைவியின் யோனித் திரவச் சத்தை ஆணின் உயிர் சுழற்சி எடுத்துக் கொண்டு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அப்படி அல்லாத சுயமான விந்து வெளியேற்றம் சக்தி இழப்புக்குத்தான் வழி வகுக்கும்.


ஆண்மை என்பது ஆணின் ஆளுமைத்திறனாகும்; அதை ஆயுள் முழுமைக்கும் கற்பென காப்பது அவசியம் ஆகும்.